அரசுப் பேருந்து மீது அதிவேகத்தில் வந்த லாரி மோதி விபத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆம்பூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேரணாம்பட்டு சென்ற அரசு பேருந்து மீது, ஆம்பூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி பயங்கரமாக மோதியது. பேருந்தின் பக்கவாட்டில் மோதிய லாரி, பேருந்தை பின்னோக்கி இழுத்துச் சென்ற நிலையில், சாலை ஓரத்தில் இருந்த தோல் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Night
Day