க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் இருந்து டீசல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஷூ கம்பெனியின் பேருந்து முருகந்தாள் கிராமத்தில் பணியாளர்களை இறக்கி விட்டு வழக்கம்போல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் காரில் வந்த 3 இளைஞர்கள், பேருந்தில் இருந்து 150 லிட்டர் டீசலை திருடிக் கொண்டிருந்தபோது, பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். ஆனால் இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களது செல்ஃபோன் பிடிபட்டது. அதனை பொதுமக்கள் கல்லாவி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். செல்ஃபோன் மூலம் அவர்களது முகவரியை அறிந்து டீசல் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...