காரைக்கால் : கடலில் மூழ்கி மாயமான மாணவரின் உடல் கரைஒதுங்கியது - மற்றொரு மாணவனின் உடலை தேடும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காரைக்காலில் கடலில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவரின் உடல் கரை ஒதுங்கியது. கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், நேற்று காரைக்காலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த 2 மாணவர்களும், ஒரு மாணவியும் தண்ணீரில் மூழ்கி மாயமான நிலையில், மாணவி ஹேமலதாவின் உடலை கடலோர காவல்படை போலீசார் மீட்டனர். இந்த நிலையில் நீரில் மூழ்கிய மேலும் 2 மாணவர்களின் உடலை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று காலை கருக்காளச்சேரி என்ற பகுதியில் மாணவர் ஜெகதீசின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து மற்றொரு மாணவர் அபிலேஷின் உடலை காரைக்கால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Night
Day