க்ரைம்
திருப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர் பெண்ணை ஒருவர் தடியால் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் உள்ள கலா என்பவரின் இட்லி கடையில் நரிக்குறவர் பெண்கள் இட்லி வாங்கி தெருவோரத்தில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அன்பழகன் என்பவர், நரிக்குறவர் பெண்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் அங்கு கிடந்த தடி ஒன்றை எடுத்து நரிக்குறவ பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியான நிலையில், அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...