கள்ளக்குறிச்சி: சொத்து தகராறில் கூலிப்படையினரை வைத்து கொலை மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் கூலிப்படையினரை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், உயிருக்கு பாதுகாப்பு வேண்டியும் பெண்கள் இருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சின்னசேலம் அருகே பால்ராம்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த மீனா குமாரி மற்றும் லாவண்யா ஆகிய இருவரும் தங்களது விவசாய நிலத்தை 3 பேர் கொண்ட கும்பல் முறைகேடாக அளவீடு செய்ய முயற்சிப்பதாகவும், அவ்வப்போது இதை பிரச்சனையாக்கி அரிவாளுடன் மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

varient
Night
Day