கடலூர்: அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி - 4 இளைஞர்களிடம் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை மீது, மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளனர். அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day