உளுந்தூர்பேட்டை : ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாய் பணத்தை இழந்த இளைஞர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜெயராமன், டிப்ளமோ முடித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான அவர், பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயராமன் தற்கொலை செய்யப் போவதாக பெற்றோருக்கு ஆடியோ குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நள்ளிரவு வீட்டின் எதிரே உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல லட்ச ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணம் இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

varient
Night
Day