அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்து குவிப்பு வழக்கு 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக்கூறி அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான வாதங்களும் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. மேலும், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இந்த வழக்கு வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

varient
Night
Day