ஆடு மேய்க்கச் சென்ற கணவன் - மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வெள்ளக்கோவில் அருகே கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வெள்ளக்கோவில் அருகே உள்ள வலசு பகுதியில் வேலுச்சாமி - சாமியத்தாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், ஆடு மேய்ப்பதற்காக அருகே உள்ள தோட்டத்திற்கு இருவரும் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மகன் வித்யாசாகர் தாய் மற்றும் தந்தையை தேடிச் சென்ற போது இருவரும் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். அதிர்ச்சியடைந்த வித்யாசாகர் வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்த போலீசார் உயிரிழந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலை, முகம் ஆகிய பகுதிகளில் காயங்கள் இருப்பதால், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  
 

Night
Day