அன்னதானம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில்  சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை சாப்பிட்ட மக்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அனைவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day