தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவிக் குழு மூலமாக தேர்வு செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நெல்லை மாநகராட்சியில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் சுய உதவி குழு மூலமாக தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ராம் அண்ட் கோ என்ற தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி டவுன், தச்சநல்லூர், மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய நான்கு மண்டலங்களில் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Night
Day