ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போதை இளைஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மது அருந்தியதைக் கண்டித்த ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் சையது முகமது குலாம் தஸ்தஹீர் பள்ளி அருகே மது அருந்திய இளைஞர்களைக் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போதையில் இருந்த நபர்கள் ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்த ஆசிரியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மதுபோதையில் இருந்த நபர்களை தேடி வருகின்றனர். 

Night
Day