க்ரைம்
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, அண்ணன் மகள் மீது திமுக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட திமுக விவசாய அணி தலைவராக உள்ள கணேசன் என்பவரின் சகோதரர் முனியசாமி இறந்த நிலையில், அவருக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்ததில் வந்த சுமார் இரண்டரை கோடி ரூபாயை கணேசன் பெற்றுள்ளார். இந்நிலையில், முனியசாமியின் மகள் ஜானகி, தனது சித்தப்பாவான கணேசனிடம் சென்று தனது பங்குத் தொகையை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசனும் அவரது குடும்பத்தினரும் ஜானகியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராயக்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழக அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் ஜானகி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...