த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த அவகாசம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை திரிஷாவுக்கு எதிரான வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகைகள் திரிஷா, குஷ்பு உள்ளிட்டோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகான் 10 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Night
Day