சிந்து நதி நீரை தடுக்க கட்டப்படும் எந்த கட்டமைப்பும் அழிக்கப்படும் - பாகிஸ்தான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிந்து நதி ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் நீர் பங்கை திருப்பிவிட இந்தியாவால் கட்டப்படும் எந்தவொரு கட்டமைப்பும் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். சிந்து நதிப் படுகையில் புதிதாக அணைகள் கட்ட இந்தியா நடவடிக்கை எடுத்தால் அது பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாக இருக்கும் என்றும் அதனை கண்டிப்பாக அழிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கவாஜா ஆசிப்பின் இந்த கருத்துக்களுக்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன், இதுபோன்ற வெற்று அச்சுறுத்தல்கள் பாகிஸ்தானியர்களிடையே உள்ள பயத்தை மட்டுமே காட்டுவதாக சாடியுள்ளார். 

varient
Night
Day