முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்புகளில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் வீணாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம், சோலையழகுபுரம் பகுதியில் இன்று முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்ட பைப் லைனில் குடிநீர் விநியோக சோதனை ஓட்டம் நடைபெற்றது. குழாய்கள் முறையாக இணைக்கப்படாததால் சாலைகளில் தொடர்ச்சியாக குடிநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் முறையாக இணைக்கப்படாமல் நடைபெற்ற சோதனை ஓட்டம் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். 

Night
Day