காசா மீது மீண்டும் தாக்குதல் - 9 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா மீது இஸ்ரேல் படை மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில், 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.  இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை நிறுத்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக கடந்த 10 ஆம் தேதி காசாவில் போர் நிறுத்தம் வந்தது. எனினும், இந்த போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தெற்கு காசாவில் இஸ்ரேலிய படைகளை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டிய நிலையில், இந்த தாக்குதலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட சில நிமிடங்களில், பிணைக்கைதி உடலை ஒப்படைப்பதை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day