உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி - அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலருக்கு ராணுவ உதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 806 நாட்களாக நீடித்து வரும் நிலையில் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்துவரும் நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாததால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 
இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Night
Day