ஆப்கானிஸ்தான் : கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்து சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day