இந்தோனேஷியா - வெடித்து சிதறும் எரிமலை - மக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேஷியாவில் எரிமலை மீண்டும் சீறத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வடக்‍கு சுலேவேசி தீவில் உள்ள எரிமலை 2 நாட்களுக்‍கு முன் வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து நெருப்புக்குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்‍கிறது. இதனைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களில் குடியிருக்‍கும் பொதுமக்‍கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்‍கப்பட்டனர். எரிமலையில் இருந்து சுமார் 6கிலோமீட்டருக்‍கு அப்பால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ​ மீண்டும் எரிமலையின் சீற்றம் அதிகரித்துள்ளது.

Night
Day