தனது மனைவியை விஷம் வைத்து கொல்ல முயற்சி - இம்ரான்கான் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலக்கப்பட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அவர், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான திருமணம் செய்தது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது மனைவி புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம்செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

Night
Day