இந்தியாவுடனான வர்த்தக உறவை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை - பாகிஸ்தான்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவுடனான வர்த்தக உறவை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்யப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தார் 
தெரிவித்துள்ளார். சமீபத்தில் லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவுடனான வர்த்தக உறவை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் தொழிலதிபர்கள் விரும்புகிறார்கள் என்றும், எனவே, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் பரிசீலிக்‍கும் என குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியபோது, அண்டை நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை இந்தியா குலைத்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Night
Day