விமான விபத்து - தலா ஒரு கோடி நிவாரணம் - டாடா குழும தலைவர் சந்திரசேசரன் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்த துயர சம்பவம் குறித்து விளக்க வார்த்தைகள் இல்லை எனக் கூறியுள்ளார். தங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் 1 கோடி ரூபாய் வழங்கும் என்றும் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார். அவர்களுக்குத் தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவும் கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் கூடுதலாக, பிஜே மருத்துவ விடுதியைக் கட்டுவதற்கும் டாடா சன்ஸ் உதவும் என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Night
Day