விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானங்கள் விபத்திற்குள்ளாகும் போது, விபத்திற்கான காரணங்கள் கறுப்பு பெட்டியில் இருந்து பெறப்படும் தகவல்கள் மூலமே உறுதி செய்யப்படும். விமானத்தின் வால் பகுதியில் இருக்கும் இந்த கறுப்பு பெட்டியில், விமானிகள், ஊழியர்களின் உரையாடல்கள் அனைத்தும் பதிவாகும். மேலும், விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை உள்ளிட்ட தகவல்களும் பதிவாகும். தற்போது, விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பதிவான தகவல்களை எடுக்க சுமார் 15 நாட்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது. இதன்பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியும் என்று விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

Night
Day