மணிப்பூர் - 11 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 11 வாக்குச் சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவின்போது குரை தொகுதியில் மொய்ராங்காம்பு சஜேப் மற்றும் தொங்கம் லைகாய், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள க்ஷேத்ரிகோவில் நான்கு மற்றும் தோங்ஜுவில் ஒன்று, உரிபோக்கில் மூன்று மற்றும் இம்பால் மேற்கு மாவட்டம் கொந்தௌஜாமில் ஒரு வாக்குச் சாவடி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு, மிரட்டல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் அரங்கேறின. இதையடுத்தே அங்கு மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்றும் வன்முறை நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் துணை நிலை ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Night
Day