மக்களவை தேர்தல் - 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குஜராத், அசாம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவை தொகுதிகளுக்கான 3-வது கட்ட வாக்‍குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஏராளமான மக்‍கள் ஆர்வத்துடன் வாக்‍களித்தனர். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் முதல் கட்டமாக கடந்த மாதம் 19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கடந்த 26-ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  

இதையடுத்து 3-ம் கட்டமாக குஜராத், பீகார், சத்தீஸ்கா், கோவா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு இன்று வாக்‍குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். 

இந்த தேர்தலில் 120 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 351 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். அவர்களில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாவர்.

வரும் 13-ம் தேதி, 20 மற்றும் 25 ஆம் தேதி, ஜூன் 1 ஆம் தேதிகளில் மேலும் 4 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்‍குகள் வருகிற ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்‍கப்பட உள்ளன. 

Night
Day