பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் 3 பேர், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளிடம் சரணடைய அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.  11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் இந்த மாதம் 8-ம் தேதி ரத்து செய்தது. 11 பேரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் இரண்டு வார கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைவதால் மேலும் அவகாசம் கோரி மூன்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அவசர வழக்‍காக நாளை விசாரிக்குமாறும் முறையிட்டுள்ளனர். 

Night
Day