நாமக்கல் அருகே சாலை விபத்து - பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். சேந்தமங்கலத்தை அடுத்த புதூரை சேர்ந்த டேவிட்டும் அதே பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவர் சரவணனும் நேற்றிரவு புதன் சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் பச்சுடையாம்பட்டியை சேர்ந்த பூவரசன், மோகன்குமார், மாணவர் கெளதம் ஆகிய மூவரும் புதன் சந்தை நோக்கி ஒரே இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். சாலையூர் என்ற இடத்தில் டேவிட் ஓட்டி வந்த வாகனம் பூவரசனின் இருச்சக்கர வாகனத்தில் மோதியதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மற்றொரு பள்ளி மாணவர் கெளதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Night
Day