பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத் தீவு பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். 

நான்கு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி முதற்கட்டமாக இங்கிலாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெரை சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு, புதுமை திட்டங்கள், கல்வி உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

மேலும், மன்னர் சார்லஸை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 25ம் தேதி மாலத்தீவிற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு நடைபெற உள்ள மாலத்தீவு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

Night
Day