பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பாடிய இளைஞர் மீது சிறுநீர் கழித்த கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பாடிய இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு, அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் ரோஹித் குமார். இவர் பிரதமர் மோடியை பற்றி புகழ்ந்து பாடிய பாடலை, தனது யூடியூப்பில் பகிர்ந்து உள்ளார். இதனை கண்ட இளைஞர்கள் சிலர் ரோஹித் குமாரை நேரில் சென்று சந்தித்து, சரமாரியமாக அடித்து உதைத்து உள்ளனர். பின்னர் அவர்கள் ரோஹித் குமார் மீது சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரோஹித் குமார் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த மைசூரு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day