ஏர் இந்தியா விமான விபத்து இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக்கு வழி வகுக்கும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் டாடா குழுமம் ஏற்கனவே 1 கோடி ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் எனத் தெரிகிறது. விபத்தால் போயிங் ட்ரீம்லைனர் ஒரு நெருப்புப் பந்தாக மாறி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதால் விமானம் மற்றும் பொறுப்பு பிரிவுகள் என்ற இரண்டின் கீழும் இழப்பீடு உரிமை கோரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு விமான நிறுவனத்தின் காப்பீட்டுக் கொள்கையானது விமானம், பயணிகள் மற்றும் மூன்றாம் தரப்பு சொத்து சேதம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day