பிப்.23 - ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். பிப்ரவரி 23-ம் தேதி சென்னை வரும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அரசியல் கட்சிகள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 13-ம் தேதி வரை தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், மார்ச் 15-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Night
Day