சென்னை : மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் : ஈ.வெ.ரா. சாலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று 2-வது நாளாக ஈவேரா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராடிய மாற்றுத்திறனாளி மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

varient
Night
Day