எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 302-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் 80 வயது முதியவர், மஹாராஷ்டிராவில் 2 பெண்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று சென்னையில் கொரோனா தொற்று காரணமாக 69 வயது மூதாட்டியும், மேற்கு வங்கத்தில் 43 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருமே இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளதாகவும், அதில் 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.