தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்‍கலின்போது நேரிட்ட விபரீதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மனு தாக்‍கல் செய்யச் சென்றபோது, டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கன்னமல சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சிராவனி, தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்‍கல் செய்ய சென்றுள்ளார். அப்போது டிராக்‍டரில் சென்ற தொண்டர்கள் சிலர், ஆர்வக்‍ கோளாறில் டிராக்‍டரை சுற்றி சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். டிராக்‍டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானதில் தொண்டர்கள் 4 பேர் படுகாயமடைந்தனர். 

Night
Day