சென்னை சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி சிறுமி படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று முட்டு சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி நீலம் பாஷா தர்கா தெருவை சேர்ந்தவர் கோபி. பெயிண்டரான இவரது 10 வயது மகள் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது குப்பைத் தொட்டி அருகே நின்றிருந்த மாடு ஒன்று மிரண்டு சிறுமியை முட்டி வீசியது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Night
Day