கோவை: மனநலம் பாதித்த நபர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் பேருந்துமுன் பாய்ந்து மனநலம் பாதித்த நபர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு, மனநல பாதிப்பு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்துக்கு கடந்த 21-ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக சாய்பாபா காலனி பேருந்து நிறுத்ததில் காத்திருந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் திடீரென பாய்ந்து ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day