எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதை விளம்பர திமுக அரசு மறுத்து வருவதாக மக்களவையில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் குற்றம்சாட்டினார்.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் எண்ணிக்கை? இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு? மற்றும் புதிய வீடுகள் கட்டுவதற்கு தேவையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் பாராட்டி விடுவார்கள் என்பதற்காகவே தமிழக அரசு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதை மறுப்பதாக குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் என்றும், ஆனால் தமிழக அரசு தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பதாகவும், வீடுகளை கட்டித் தரவும் அதற்கு தேவையான நிதியை வழங்கவும் மத்திய அரசு தயாராக இருந்தும் அதனை தமிழக அரசு மறுப்பதாக குற்றம் சாட்டினார்.