டெல்லி: ரீல்ஸ் எடுப்பதற்காக வாகன சாகசத்தில் ஈடுபட்ட 28 நபர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரீல்ஸ் எடுப்பதற்காக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 28 நபர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். புது டெல்லியின் முக்கிய பகுதியில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சாகசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தேர்தல் பறக்கும் படையினர், வாகன சாகத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து டெல்லி போலீசாருக்கு தகவலளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாகசத்தில் ஈடுபட்ட 28 நபர்களை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்தனர். 

Night
Day