டிச.11,12ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும் எனவும், இவை வரும் 11ம் தேதி இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்தது. இதனால், இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.10ம் தேதி, கடலோர மாவட்டம், உள் மாவட்டம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 11ம் தேதி, கடலோர மாவட்டம், உள் மாவட்டம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

varient
Night
Day