சோமாலியா கடல்பகுதி : கடற்கொள்ளையர்களிடம் இருந்து 17 பணியாளர்கள் மீட்பு - இந்திய கடற்படை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சோமாலியா கடற்கொள்ளையர்களின் கடத்தல் முயற்சியில் இருந்து 17 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை எம்.வி.ருயென் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தியது. அப்போது சரக்கு கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில், 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படை வீரர்களிடம் சரணடைந்தனர் என்றும் அந்த கப்பலில் இருந்த சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

Night
Day