சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளையொட்டி திருப்பதி கோயிலுக்கு 38 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் பேரன் நாரா தேவான்ஷ் நேற்று தனது 11வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த சந்திரபாபு நாயுடு, கோயில் அன்னதான செலவுக்காக 38 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். தேவஸ்தான அதிகாரிகளிடம் பிரசாதங்களை பெற்ற பின், அன்னதான கூடத்திற்கு சென்ற அவரது குடும்பத்தினர், பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

varient
Night
Day