ஓட்டுநரின்றி பின்னோக்கி ஓடிய அரசுப் பேருந்து

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் கோட்டயம் பேருந்து நிலையத்தில் நிறத்தப்பட்டிருந்த அரசு பேருந்து ஓட்டுனரின்றி பின்னோக்கி சென்று சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. கோட்டயம் மாவட்ட பேருந்து நிலையத்திற்கு வந்த கேரள அரசு விரைவு பேருந்தில் ஹேண்ட் பிரேக் போட மறந்து ஓட்டுனர் நிறுத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பேருந்து திடீரென பின்னோக்கி ஓடியது. இதனைக் கண்டு அவ்வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டுனர் ரவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

varient
Night
Day