உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த நீங்கள் தயாரா - பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த நீங்கள் தயாரா என பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், பொதுமக்கள் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என விரும்பும் பிரதமர் மோடி, முதலில் உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தத் தொடங்குவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் தினமும் பயணம் செய்யும் அந்த வெளிநாட்டு விமானத்தை விட்டுவிடுவீர்களா, நாள் முழுவதும் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் விட்டுவிடுவீர்களா என்றும் பிரதமரை அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

Night
Day