உத்தரகாண்ட் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேகவெடிப்பால் கடுமையாக பாதிக்கப்பட உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  உத்தரகாசி மாவட்டம் தாராலியில் கடந்த 5ம் தேதி  மேகவெடிப்பு காரணமாக குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் வீடுகள், ஹோட்டல்கள் அடித்துச் செல்லப்பட்டதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நாளாக ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 52 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

varient
Night
Day