எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 2 இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், தாங்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜம்மு & காஷ்மீர் மாணவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 4வது நாளாக இன்று நீடித்து வருகிறது. இந்த நிலையில், இருநாடுகளும் பரஸ்பரம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இதுவரையில் ஈரானில் 230க்கு மேற்பட்டோரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், இந்திய மாணவர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், தலைநகர் டெஹ்ரானில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகின்றனர். இருவரும் சிறு காயங்களோடு உயிர் தப்பிய நிலையில் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் அருகில் உள்ள வேறு இடத்திற்கு தஞ்சம் அடைந்துள்ளனற். அந்த இடத்திற்கு அருகிலும் தாக்குதல் சத்தங்கள் கேட்பதாகவும் மாணவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ஜம்மு & காஷ்மீர் மாணவர் சங்கம் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில், பிரதமர் இதில் தலையிட்டு இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேஸ் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளளது. ஈரான் ஏவுகணை விழுந்ததில் தூதரகத்துக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், ஆனால் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்காபி தெரிவித்துள்ளார். தாக்குதல் காரணமாக தூதரக நடவடிக்கைகள் இன்று ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.