பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், சைப்ரஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிட்ஸ் வழங்கினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சைப்ரஸின் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் விருதைப் பெறுவதில் பணிவுடன் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியா-சைப்ரஸ் நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day