இந்தியா
'காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களிடம் கவனத்துடன் பேச வேண்டும்' - காங்கிரஸ் தலைமை...
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங?...
வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்களவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் எனக் கருதுவதாகவும், அதே நேரத்தில் அவா்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது எனக் கூறினார். இதற்காக அவா்கள் கூட்டணிக் கட்சிகளை நாட வேண்டியிருந்தாலும், அக்கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு தராது எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்தியா கூட்டணியில் முடிந்த அளவுக்கு சிறப்பான தொகுதிப் பங்கீடு அமையும் என எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து சிறப்பான தொகுதி உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாஜகவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உறுதி என்றும் சசிதரூர் தெரிவித்தார்.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங?...
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் மரண வழக்கு தொ?...