டெல்லியில் குளிர்காய மூட்டிய நெருப்பால் இருவேறு இடங்களில் நேர்ந்த விபரீதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் இருவேறு இடங்களில் குளிர்காய மூட்டிய நெருப்பில் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் அடர்பனியுடன் கூடிய கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லிக்குட்பட்ட கெடா கலான் கிராமத்தில் வீடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 4 பேர் நெருப்பில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர். அவர்கள் லாரி ஓட்டுநரான ராகேஷ் திங்கர், அவரது மனைவி லலிதா தேவி மற்றும் அவர்களின் 8 மற்றும் 7 வயதுக் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோல் இந்திராபுரி பகுதியில் நெருப்பு மூட்டி உறங்கிக் கொண்டிருந்த அபிஷேக் மற்றும் ராம் பகதூர் என்ற இரு இளைஞர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

Night
Day