அரியானா - இன்று புதிய அரசு மீதான நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி தமது அரசுக்‍கு 48 எம்எல்ஏக்‍கள் ஆதரவு இருப்பதாகவும் இன்றே சட்டசபையில் தமது அரசு மீது நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய முதல்வர் சைனி, தமது அரசு மீதான நம்பிக்‍கை வாக்‍கெடுப்பை இன்றே நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்‍கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார். தமது அரசுக்‍கு 48 எம்எல்ஏக்‍களின் ஆதரவு இருப்பதாகவும், இது பற்றி ஆளுநரிடம் ஏற்கனவே கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால் இன்று காலை 11 மணிக்‍கு 
சட்டப்பேரவையில் நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு நடத்துமாறு கேட்டுக்‍கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Night
Day